Monday, February 2, 2026

பாஜகவினரின் எதிர்ப்பு கோஷங்களுக்கிடையே அல்லாஹ் அக்பர் கூறி எம்பியாக பதவியேற்ற உவைசி !

spot_imgspot_imgspot_imgspot_img

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், கடந்த இரண்டு தினங்களாக எம்.பிக்களாக பதவிஏற்றனர். அவர்களுக்கு தற்கால சபாநாயகர் வீரேந்திர குமார், எம்.பியாக பதவிப் பிரமானம் செய்துவைத்தார். மாநிலங்களின் பெயர்கள் அடிப்படையில் எம்.பிக்கள் பதவிப் பிரமாணம் எடுத்தனர்.

அதன்படி, தெலங்கானா, தமிழ்நாடு எம்.பிக்கள் நேற்று பதவியேற்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதரபாத் தொகுதி எம்.பியாக பதவியேற்பதற்கு அசாதுதீன் ஓவைசியின் பெயர் வாசிக்கப்பட்டது. உடனே, பா.ஜ.க எம்.பிக்கள் ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம் என்று கோஷம் எழுப்பத் தொடங்கினர். சிரித்த முகத்துடன், தொடர்ந்து கோஷம் எழுப்புங்கள் என்பதுபோல கையை அசைத்துக் கொண்டே வந்த ஓவைசி பதவிப் பிரமாணத்தின் இறுதியில், ’ஜெய் பீம்’, ‘ஜெய் மீம்’ ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினார்.

அவர், பதவிப் பிரமானம் எடுக்கும்போதும், பா.ஜ.க எம்.பிக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர். பா.ஜ.க எம்.பிக்களை சிரித்த முகத்துடன் ஓவைசி எதிர்கொண்டது பலரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் பதவிப் பிரமாணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img