Sunday, May 5, 2024

ராகுல் காந்தியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி !

Share post:

Date:

- Advertisement -

பாஜக வின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி யுமான சுப்ரமணிய சுவாமி மீது சத்தீஸ்கர், தெலுங்கானா போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் எடுத்துக்கொள்வார் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதனை எதிர்த்து சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பவன் அகர்வால் கொடுத்த புகாரின் பேரில் பத்தல்கோன் காவல்நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பவன் அகர்வால், “சுப்பிரமணிய சுவாமி வேண்டுமென்றே ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இது ஒரு மோசமான, பொறுத்துக்கொள்ளமுடியாத கருத்து” என கூறியுள்ளார். சுப்பிரமணிய சுவாமி மீது 504, 505(2), 511 ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக தெலுங்கானாவிலும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...