Monday, December 1, 2025

அதிரை கடற்கரைத்தெருவில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், ஜமாத்தார்கள் மற்றும் முஹல்லாவாசிகள் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

சிறப்பாக நடைபெற்ற இம்முகாமில் 90க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் முதன்முறையாக ரத்ததானம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்ததானம் செய்த அனைவருக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து சென்ற கல்வி ஆண்டில் 10,11,12 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் மார்க்க கல்வி முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத்தினர், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், இளைஞர்கள் மற்றும் முஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img