Friday, May 3, 2024

பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேசதுரோக வழக்கா? ~PFI கண்டனம்…!

Share post:

Date:

- Advertisement -

நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் படுகொலைக்கு எதிராக தங்களுடைய அக்கறையை வெளிப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல் எழுதிய 50 பிரபலங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிந்துள்ளதாக வந்துள்ள செய்தி குறித்து தன்னுடைய அதிர்ச்சியையும் கோபத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.அபுபக்கர் வெளிப்படுத்தியுள்ளார். பிரபலங்களுக்கு எதிராக தேச விரோத செயல், பொதுமக்களுக்கு இடையூறு, மத உணர்வுகளை காயப்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தெளிவாக மக்களை அச்சுறுத்தும் நோக்கில் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் நிகழ்வாகும்.

சுதந்திரமாக பேசுவது, எதிர் கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையை பாதுகாப்பது, சிறுபான்மை மற்றும் தலித்களுக்கு எதிரான வன்முறை குறித்து கேள்வி எழுப்புவது போன்றவை இப்போது நாட்டில் குற்றங்களாக கருதப்படும் நிலை கோபத்தை ஏற்படுத்துகின்றது. பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளூர் வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி நீதியை திரிக்கும் போக்கை கொண்டிருக்க வேண்டும் அல்லது நாட்டில் உள்ள யதார்த்த சூழல்களுடன் தொடர்பை இழந்தவராக இருந்திருக்க வேண்டும். நாட்டில் நடந்து வரும் கும்பல் படுகொலை குறித்து உச்சநீதிமன்றமே தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி அதற்கு எதிரான சட்டங்களை நிறைவேற்ற அறிவுறுத்தியுள்ளது.

வழக்கு பதியப்பட்டுள்ள பிரபலங்களுக்கு தன்னுடைய ஆதரவை பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் வெளிப்படுத்தியதுடன், நாட்டு குடிமக்கள் தங்களுக்கு விருப்பமானதை பேசும் உரிமையை பாதுகாப்பதில் இயக்கம் எப்போதும் துணைநிற்கும் என்ற உறுதியையும் அளித்துள்ளார்.

இப்படிக்கு

டாக்டர். முஹம்மது ஷம்மூன்,
தலைவர், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு,
பாப்புலர் ஃப்ரண்ட், தலைமையகம், புது தில்லி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...