Tuesday, April 30, 2024

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது என்சிபி-சிவசேனா அரசு !

Share post:

Date:

- Advertisement -

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் 19வது முதலமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்றார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

அதன் பின்னர், இன்று மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூடியது. ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, உத்தவ் தாக்கரே அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் உத்தவ் தாக்கரேவை 169 எம்எல்ஏ-க்களின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பாஜகவின் 105 எம்எல்ஏ-க்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். உத்தவ் தாக்கரே அரசிற்கு எதிராக எந்த ஒரு எம்எல்ஏ-வும் வாக்களிக்கவில்லை. மேலும் 4 எம்எல்ஏ-க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து விலகினர்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிகளோடு சேர்ந்து ஏற்கனவே உத்தவ் தாக்கரேவிற்கு 154 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...