மத்திய அரசு நடைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம், மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் இஸ்லாமியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் எனக்கூறி நாடு முழுவதிலும், அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை ஆவடி அருகே உள்ள ஏ.எம்.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிற்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.