உலக நாடையே உலுக்கி வரும் COVID-19 என்று கூறப்படும் கொரோன வைரசானது உலக மக்களையே வீட்டிற்குள் அடங்க வைத்துள்ளது என்பது அறிந்தது ஒன்றே.
தமிழகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (24-03-2020) அன்று மாலை 6 மணி முதல் 144 தடையனது ஏப்ரல் 1 வரை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான பால்,காய்கறி, உணவு மற்றும் மீன், இறைச்சி போன்றவை தங்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதேபொல் பால் விற்பனையானது காலை முதல் இரவு வரை கிடைத்து வந்த நிலையில். தற்பொழுது தமிழக அரசு பால் விற்பனைக்கு சில விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 144 விதிக்கப்பட்ட தடை நீக்கும் வரை நாளை (27-03-2020) முதல் அதிகாலை 03:30 மணி முதல் காலை 09:00 மணி வரை பால் விற்பனை செய்ய தமிழக அரசால் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட அதிக விலைக்கு பால் விற்பனை செய்யும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.