தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50வது பிறந்தநாள் வருகிற ஜூன் 19 அன்று விவசாயிகள் பாதுகாப்பு தினமாக காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் நாகூர் கனி விவசாயிகளுக்கு இலவச தென்னை மரக்கன்றுகளை வழங்கி,தற்போது அவர்கள் சந்தித்து வரும் பொருளாதர நெருக்கடிகளை குறித்தும் கேட்டறிந்தார்.இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஹசன் பாவா, முஹம்மது அப்துல் காதர், தாஜுதீன், அப்துல் அஜீஸ், சிராஜுதீன், அப்துல் சுகுது, மக்கான் முஹமது,சுல்தான் ஆனந்த்,வீரையன், சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.