தஞ்சாவூர் மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டிணம் துறைமுகம் மதுபிரியர்களின் கூடாரமாக காட்சி அளிக்கிறது.
தமிழக அரசின் துறைமுக விரிவாக்க திட்டத்தின் அடிப்படையில் சுமார் 65 கோடி செலவில் மல்லிப்பட்டிணம் மீனவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் துறைமுக விரிவாக்க பணிகள் செயல்படுத்தப்பட்டு கடந்த ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மாலை நேரங்களில் மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிவந்து துறைமுகத்தில் குடிக்க கூடிய அவல நிலை இருக்கிறது.மேலும் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை உடைத்துவிட்டும் செல்கின்றனர்,பான் மசாலா போன்றவற்றின் எச்சில்களை துறைமுக கட்டிடங்களில் துப்பிவிடுகின்றனர். இதனால் மீன் வியாபாரிகள், சுற்றுலாவாசிகள் முகம்சுழிக்கும் ஒரு சூழல் இருக்கிறது.மதுபாட்டில்களை அப்புறப்படுத்தி தூய்மை பணிகளை மீன்வளத்துறை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மதுபான அருந்துவோரை கட்டுப்படுத்த காவல்துறையினர் இரவு நேரங்களில் துறைமுகத்தில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.