டெல்லியில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக உலகமே உற்று நோக்கும் வகையில் வேளாண் சட்ட மசோதாவிற்கு திரும்ப பெற வலியுறுத்தி அமைதி போரட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ,இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 8 நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திவரும் விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.இதற்கு நாடுமுழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக,தெலுங்கு ராஷ்டிரிய சமிதி,கம்யூனிஸ்ட் கட்சிகள்,மமக,எஸ்டிபிஐ என பலரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றன.
அதே போல வேளாண் சட்டத்தை திரும்ப நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் அதிரையர்களும் பங்கேற்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்வார்களா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்