Sunday, May 5, 2024

ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு போர்த்திய விஷமிகள் !

Share post:

Date:

- Advertisement -

ஒரத்த நாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெரியார் சிலைக்கு காவி சாயம், செருப்பு மாலை என விஷமிகள் சிலர் தொடர்ந்து விஷம செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்த நபர் , கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி பிரச்சினையை தொடங்கி வைத்தனர்.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் சிலைக்கு காவி பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்தனர். பெரியாரை அவமதிப்பு செய்தவர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு தண்டித்தாலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டே தான் இருக்கின்றன.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள ஆறடி உயரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் நள்ளிரவில் காவி துண்டு மற்றும் தலையில் தொப்பி அணிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்திருப்பது திராவிட கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியார் சிலை அருகே 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...