அதிரை எக்ஸ்பிரஸ் ஊடக குழு சார்பில் ஹிஜ்ரி 1442, கடந்த ரமலான் மாதம் கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து பொதுமக்கள் கலந்துக் கொண்டு போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கடினமான முயற்சிகளுக்குப் பின்னர் முதல் மற்றும் 2 வது இடத்திற்கான வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதனை நேற்றே வெளியிட அதிரை எக்ஸ்பிரஸ் முயற்சி செய்தது.
இணையத்தில் தொழில்நுட்ப குழுவினரின் சில பணிகள் நடைபெற்று வருவதால் முறையாக வெற்றியாளர்களையும், ஆறுதல் பரிசு பெற தகுதியானவர்கள் பெயர்களையும் அறிவிக்க முடியவில்லை.
அதிரை எக்ஸ்பிரஸ் – ன் தொழில்நுட்ப குழுவின் பணிகள் இணையத்தில் 3 நாட்களாக தொடர்வதால், பணிகள் முடிந்து விரைவில் போட்டியின் முடிவுகள் வெளியிடப்படும்..
உங்களுடைய சிரமத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் வருந்துகிறது..
போட்டியின் வெற்றியாளர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.. இணைந்திருங்கள் இணையத்துடிப்போடு..
-பொறுப்பாசிரியர்
(அதிரை எக்ஸ்பிரஸ்)