ஊழலில்லா உள்ளாட்சி, நேர்மையான நல்லாட்சி என்ற குறிக்கோளோடு அதிரை நகராட்சியின் 14 வார்டுகளில் மஜக, ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு, தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவோடு SDPI போட்டியிடுகிறது. இந்நிலையில் வேட்பாளர்கள் தங்களின் சொந்த பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது என SDPI கட்டளையிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாவட்ட பொது செயலாளர் முகம்மது புகாரி, மக்கள் தரும் நிதியை கொண்டு தேர்தலை சந்திப்போம், மக்களுக்காகவே சேவையாற்றுவோம். சொந்த பணத்தை போட்டு செலவு செய்ய அரசியல் ஒன்றும் வியாபாரம் அல்ல. தேர்தல் சமயத்தில் முதல் போட்டு வெற்றிபெற்ற பின் ஊழல் செய்து சம்பாரித்துவிடலாம் என பிற கட்சிகளில் பலர் கனவு காண்கின்றனர். ஊழலின் ஆணிவேரை பிடுங்கி எறியும் விதமாக SDPI வேட்பாளர்கள் யாரும் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது என்ற தலைமையின் கட்டளையை ஆரம்பம் முதலே கடைபிடித்து வருகிறோம். எனவே அதிரையில் நேர்மையான நல்லாட்சி அமைய அதிரை மக்கள் தாராளமாக நிதி தாருங்கள். +91 9942268351, +91 9600809828 ஆகிய எண்களில் எங்களை தொடர்பு கொண்டு தேர்தல் நிதியை அளிக்கலாம்.
அதிரை மக்களிடம் தேர்தல் நிதி கேட்கும் SDPI! வேட்பாளர்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது என கட்டளை!!
More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...





