அதிரை நகராட்சியின் 27 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சில இடங்களில் வேட்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. மேலும் வேட்பாளர்களின் முகவர்களும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் மாறிமாறி அர்ச்சனை செய்துக்கொண்டனர். இந்நிலையில், வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையை 24 மணிநேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.