Sunday, May 5, 2024

அதிரை குளத்தில் குப்பை கொட்ட வந்தவர்களை விரட்டியடித்த வார்டு கவுன்சிலர்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை 13வது வார்டு கவுன்சிலராக SDPI கட்சியின் பெனாசிரா அஜாருதீன் வெற்றிப்பெற்றுள்ளார். இந்நிலையில் 13வது வார்டுக்குட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக SDPI அஜாருதீன் மற்றும் காதர் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சிலர், குட்டியானையில் குப்பைகளை கொண்டு வந்து ஆணைவிழுந்தான் குளத்தில் கொட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வாகனத்தில் வந்தவர்களை சுற்றிவளைத்த அவர்கள், குளத்தில் கொட்டிய குப்பைகளை மீண்டும் வாகனத்தில் ஏற்ற செய்தனர்.  பின் மதுக்கூர் சாலையில் உள்ள குப்பை கிடங்கிற்கு சென்ற அஜாருதீன், குப்பை கிடங்கை பார்வையிட்டதோடு இனி ஆணைவிழுந்தான் குளத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து அந்த குளத்தை மீட்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நகராட்சி பணியாளர்களுக்கு அறிவுகளை வழங்கினார்.

முன்னதாக அதிரை தக்வா பள்ளிவாசல் அருகே உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...