Monday, April 29, 2024

அதிரையில் உருகுலைந்த கார்! மாடு பலி!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் அங்கும் இங்குமாக திரிந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி பயணப்பட்ட கார் ஒன்று அதிரை கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றபோது குறுக்கே வந்த மாட்டின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அந்த காரின் முன்பகுதி உருகுலைந்தது. காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். ஆனால் படுகாயமடைந்த மாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதனிடையே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் உயிரையும் கால்நடைகளின் உயிரையும் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...