Friday, May 3, 2024

அதிரை சாணாவயலில் சாலை, கழிவுநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துக! பரிந்துரை செய்தார் எம்.எல்.ஏ!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையின் விரிவாக்க பகுதியாக கருதப்படும் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட சாணாவயல் மற்றும் சவுக்குகொல்லை பகுதியில் இதுநாள் வரை முறையான சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து மேலத்தெருவை சார்ந்த என்.ஏ.முகம்மது யூசுப் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையின் பரிந்துரையுடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார். இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்மந்தப்பட்ட அலுவலர் உறுதி அளித்திருப்பதாக யூசுப் கூறினார். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்ய உறுதுணையாக இருந்த தஞ்சை திமுக தெற்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் மற்றும் ஏரிபுரக்கரை கவுன்சிலர் சுரேஷ் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...