அதிரையின் விரிவாக்க பகுதியாக கருதப்படும் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட சாணாவயல் மற்றும் சவுக்குகொல்லை பகுதியில் இதுநாள் வரை முறையான சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து மேலத்தெருவை சார்ந்த என்.ஏ.முகம்மது யூசுப் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையின் பரிந்துரையுடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார். இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்மந்தப்பட்ட அலுவலர் உறுதி அளித்திருப்பதாக யூசுப் கூறினார். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்ய உறுதுணையாக இருந்த தஞ்சை திமுக தெற்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் மற்றும் ஏரிபுரக்கரை கவுன்சிலர் சுரேஷ் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அதிரை சாணாவயலில் சாலை, கழிவுநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துக! பரிந்துரை செய்தார் எம்.எல்.ஏ!!
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





