அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து மிலாரிக்காடு வழியாக நடுவிக்காடு வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் இருக்கும் இந்த சாலையை புதிதாக புனரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். மக்களின் கோரிக்கை குறித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையின் கவனத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும் முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் கொண்டு சென்றார். இந்நிலையில், அந்த சாலையை புனரமைக்க ரூ.2.85கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 2.9கிலோ மீட்டர் வரையிலான இந்த சாலையின் பணி விரைவாக துவங்கும் என தெரிவித்திருக்கும் எஸ்.எச்.அஸ்லம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை உள்ளிட்டோருக்கு சி.எம்.பி லைன் பகுதி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.
அதிரை சி.எம்.பி லைன் மக்களுக்கு பிறந்தது விடியல்! ரூ. 2.85கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!!
More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....
-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்-
பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...





