Wednesday, March 18, 2026

அனல்பறக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை!! அதிரையில் திறப்பு விழா ஒத்திவைப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

2023ம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல், பெரியார், அண்ணா உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்ததுடன் சிலவற்றை தாமாக சேர்த்துக்கொண்டார். இதனால் தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கடுப்பான ஆளுநர் ஆர்.என்.ரவி, உடனடியாக அவையிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நாளையதினம் வெள்ளிக்கிழமை முதலமைச்சரின் முக்கியத்துவம் வாய்ந்த உரை இடம்பெற இருப்பதால் அன்றையதினம் அதிரையில் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பங்கேற்க இருந்த தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் தெரிவித்துள்ளார். மேலும் பின்னர் அறிவிக்கப்படும் திறப்பு விழா தேதியில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img