Wednesday, March 18, 2026

அதிகரிக்கும் காய்ச்சலால் அவதியுறும் அதிரையர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

பருவமழை காலம் முடிந்த போதிலும் பனியும் குளிரும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. வானிலை தட்பவெட்ப மாற்றத்தினால் அதிரை மக்களுக்கு தொண்டை வலியுடன் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பு 5 நாட்களுக்கும் மேலாக உடலை வாட்டுவதால் அதிரையர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சாதாரண தொண்டை வலியில் ஆரம்பித்து, சளி இருமலாக மாறி வறட்டு இருமல் ஏற்படுகிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், தற்போது தட்பவெட்பநிலை மாற்றத்தால் தான் இது போன்ற காய்ச்சல் ஏற்படுகிறது பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை எனவும், மேலும் மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மூச்சு விடுவதில் சிரமம், நினைவாற்றல் குறையும் போது, இடைவிடாத காய்ச்சல் ஏற்படும் சூழலில் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img