Friday, May 3, 2024

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

Share post:

Date:

- Advertisement -

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி
……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்
துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற
……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவு
இஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்
…….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனே
கொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்
……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள் கவியே!

பச்சைப்பட் டாணியுடன் கேரட்டும் சேர்த்துப்
…பக்குவமாய் வெட்டிவைத்துக் கொண்டவுடன் பின்னர்ப்
பிச்சுப்போ டுவதற்கு மணந்தருமாம் மல்லிக்கீ ரையையும்
…பிரித்துவைத்துக் கொண்டவுடன் பாத்திரத்தை அடுப்பில்
உச்சமிலாச் சூட்டினிலே காயவைத்துப் பின்னர்
….ஊற்றுங்கள் எண்ணெயையும் அப்பாத்தி ரத்தில்
உச்சமாய்ச் சூடேறி கொதிக்கும் எண்ணெய்
…உடனிடுக வெங்காயம் பச்சைநிற மிளகாய்!

வாசனைக்கூ ட்டுமேலம் கிராம்புடன் பட்டை
..வகையறாவும் இஞ்சிபூண்டு விழுதையையும் சேர்த்து
ஓசையுடன் எண்ணெயிலே தாளிக்கும் வேளை
…ஓரமாய் நிற்கின்ற தக்காளி சேர்த்து
மேசையிலே காத்திருக்கும் பட்டாணி கேரட்
…மெதுவாகக் கொட்டுங்கள் எண்ணெயின் சூட்டில்
வாசனையும் நாசியையும் துளைக்கின்ற வரைக்கும்
..வாணலியில் கரண்டியினால் துடுப்பைப்போல் துழாவு!

ஆட்டிறைச்சிக் கழுவியதைத் தேவைக்குக் கணக்காய்
…அடுப்பிலிருக் கின்றஎண்ணெய்க் கொதியலில் கலந்து
போட்டுவிட்டப் பின்னர்தான் ஊறியுள்ள கலவை
…பருப்புவெந்த யத்துடனே அரிசியையும் கொட்டி
தேட்டமுடன் வண்ணம்சேர்; அதற்காக ஒற்றைத்
…..தேக்கரண்டி அளவுக்கு “மசாலாவின்” பொடியை
போட்டவுடன் தண்ணீரைப் பாத்திரத்தின் பாதி
….பரப்பளவில் நிற்குமாறு ஊற்றியதும் மூடு!

ஒருகொதியில் புகைமண்டி வருகின்ற வேளை
…ஓரெலுமிச் சைப்பழத்தின் சாற்றையையும் பிழிந்து
ஒருமுறையில் கிண்டியதும் பாத்திரத்தை மூடு
…ஒருகுவளைத் தேங்காயின் பாலெடுத்துக் கொட்டு
மறுமுறையில் இன்னும்வே கமாகவே துழாவு
…மறுபடியும் தண்ணீரும் குறைவாகிப் போனால்
மறுகொதியும் வருமளவுத் தண்ணீரை ஊற்று!

மணக்குமல்லிக் கீரையிலை மேற்பரப்பில் கொட்டு
….மயக்கும்வா சனையுடனே புகைமண்டிக் காட்டும்
கணக்காகத் தண்ணீரும் கலந்திட்டால் நோன்பு
…கஞ்சியென்னும் அமிர்தமும் சொல்லிடுமே மாண்பு
பிணக்கின்றிச் சுவைகூட்ட உப்பையும் அளந்து
….பிரியமுடன் இட்டுக்கொள்; மறவாமல் கலந்து
சுணங்காமல் அடுப்பின்கண் சூட்டையும் குறைத்தால்
…சுவைகுன்றா நோன்புகஞ்சி ஆயத்தமாகும் நிறைவாய்

கவியன்பன்கலாம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...