Thursday, August 7, 2025

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது.இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது என சமூக ஆர்வலர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இது போன்ற தொடர் விபத்துகளால் ஒன்றுமே அறியாத அப்பாவி பொதுமக்கள் காயமுற்று துடிதுடித்து மரணிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.இது போன்ற விபத்துகள் இனி வரக்கூடிய காலங்களில் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அதிரையில் உள்ள மது கடைகள் முற்றிலும் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், அதிரை காவல்துறை விபத்துக்கள் ஏற்படுவதை முற்றிலும் தடுப்பதற்கு எந்த வித கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதை கருத்தில் கொண்டும் மாபெரும் தொடர் போராட்டம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.பொதுமக்கள் பலர் இந்த போராட்டம் குறித்த அடுத்தகட்ட அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும், இந்த போராட்டம் மூலம் அதிரையில் மதுக்கடையை மூட வேண்டும் எனவும் பலரும் தெரிவிக்கின்றனர்.மேலும் அந்த சமூக வலைதள பதிவுகளில் விரைவில் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளதாகவும், மேலும் எங்கள் ஊரில் மதுக்கடை வேண்டாம் எனவும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.அதுமட்டுமின்றி மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வரும் சமூக சீர்கேடுவாதிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் ஹெல்மெட் அணிந்து பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...
spot_imgspot_imgspot_imgspot_img