Wednesday, March 18, 2026

அடாவடியில் ஈடுபட்ட அதிரை திமுக கவுன்சிலரின் கணவர்! நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் ARDA அமைப்புக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற மருத்துவமனைக்கான கட்டுமான பணியை அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரும் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான முகம்மது சாலிஹ் மேற்கொண்டுவந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் கிருத்திகாவின் கணவரான ராஜா, கட்டுமான பணியை சட்டவிரோதமாக நிறுத்தியதுடன் ஆபாசமான வார்த்தைகளை பேசி அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் சாலிஹை தாக்க முயன்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்டித்து மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் மன்றம் தமிழ்நாடு காவல்துறை மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் செய்துள்ளது. அதில் அதிராம்பட்டினத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர் முஹம்மது சாலிஹை தகாதவார்த்தையில் திட்டி, தாக்க முயன்ற நகராட்சி திமுக கவுன்சிலர் கிருத்திகாவின் கணவர் ராஜாவை வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறையில் அளித்துள்ள புகார் மீது @tnpoliceoffl உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
CC: @mkstalin என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img