Friday, May 3, 2024

அதிரை அரசு மருத்துவமனையில், முதன் முதலாக குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து சாதனை !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகர் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது45). இவர் கடந்த 3 மாதங்களாக குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் நியூட்டன் ஆலோசனையின்படி உடல் பரிசோதனை செய்து வந்துள்ளார். இருந்தபோதும் குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டாக்டர் நியூட்டன் தலைமையிலான மருத்துவ குழுவினரான அறுவை சிகிச்சை நிபுணர் பிரசன்னா, மயக்க மருந்து நிபுணர்.டாக்டர்.ஹக்கீம், மருத்துவ சேவைகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம் ஆகியோர் இணைந்து குடல் இறக்க அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினால் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...