Saturday, May 18, 2024

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கவனத்திற்கு!

Share post:

Date:

- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத அதிகனமழை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாமல் பெய்யும் கனமழையாலும், அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீராலும் நான்கு மாவட்டங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன. அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள், சமூக அமைப்புகள் என பலரும் தங்களால் இயன்ற மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி தமிழ்நாடு அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், தேவையான உதவிகளை பெற வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்விட்டர், முகநூல் போன்ற தளங்களிலும் பொதுமக்கள் உதவிகள் கேக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📱வாட்ஸ்அப் எண்: 81485 39914
✖️ட்விட்டர் (X): @tn_rescuerelief மற்றும் @tnsdma
💻பேஸ்புக்: @tnsdma

இதுதவிர நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மீட்புப்பணிகள், அவசர உதவி, ஆம்புலன்ஸ் தேவைக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள இகக்கங்களின் தொலைபேசி எண்கள் கீழே போஸ்டர்களாக கொடுக்கப்பட்டுள்ளது. தேவையுடையவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...