அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31 இவருக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது.
குடும்ப சூழல் காரணமாக, குழந்தையின் தாய் மலேசியாவிற்கு பணிக்காக. சென்றாதக கூறப்படுகிறது. இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான பாலசுப்பிரமணியன் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் மது குடிக்க பணம் இல்லாமல் விரக்தியில் இருந்த இவன் அவ்வப்போது குழந்தையை துன்புறுத்தி வீடியோ எடுத்து மனைவியிடம் பணம் கேட்டிருக்கிறார்.
வேதனையில் துடித்த தாய் சிவரஞ்சனி
அவ்வப்போது மது போதையில், இருக்கும் இவன் குழந்தையை பிளேடால் கிழித்தும், சிகரெட்டால் சூடுவைத்தும் துன்புறுத்தி வந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையின் கவனத்திற்கு சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றனர், இதனை அடுத்து களத்தில் இறங்கிய அதிராம்பட்டினம் காவல்துறையினர் துரிதமாக சம்பந்தப்பட்ட குழந்தையை மீட்டு தஞ்சை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின்னர் குற்றவாளியை போலிசார் கைது செய்தது உரிய விசாரணையில் மனைவியை ஊருக்கு வர வைப்பதற்கு இது போன்ற வன் செயலில் ஈடுபட்டத்தாகவும், மது போதையில் குழந்தையை துன்புறுத்தியதையும் ஒப்பு கொண்டார்.
இதனை அடுத்து பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறைக்கு அடைக்கப்பட்டார்.
அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!
More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...





