கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில் திமுக மேற்கு நகர பொறுப்பாளர் S.H.அஸ்லம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான கா.அண்ணாதுரை கலந்துக்கொண்டார்.
முன்னதாக ஜாவியா நிறைவு நாளையொட்டி ஜாவியா மஜ்லிஸ் முடிந்து வெளியே வந்த ஆயிரக் கணக்கானோரை சந்தித்து கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து மார்க்கெட் சாலை அருகில் திமுக கொடியை ஏற்றி வைத்து பேசிய அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே சதவீத அடிப்படையில் அதிகபட்சமாக 90% வாக்குகளை உதயசூரியனுக்கு அளித்து அதிரை மேற்கு நகர மக்கள் மகத்தான வெற்றியை பரிசளித்திருப்பதாக கூறினார். இதனால் அதிரையின் வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் இஸ்லாமிய மக்களுக்கு எப்போதும் திமுக கடமைப் பட்டிருப்பதாகவும் கா.அண்ணாதுரை தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலேயே அதிரை மேற்கு நகரம் தான் நம்பர் ஒன்.! எம்.எல்.ஏ புகழாரம்..!!
More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...
அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...
பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் கா....

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...





