அதிராம்பட்டினம் நகராட்சியின் 2வது வார்டு கவுன்சிலராக மேற்கு நகர திமுக பொறுப்பாளரும் முன்னாள் சேர்மனுமான S.H.அஸ்லத்தின் மனைவி சித்தி ஆயிஷா இருந்து வருகிறார். நகர்மன்ற தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே சில அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சித்தி ஆயிஷாவின் வார்டை நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. இந்தநிலையில், 2வது வார்டுக்கு சாலை, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரையுடன் நேரில் சந்தித்து அஸ்லம் மனு அளித்துள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், விரைவாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





