Tuesday, March 10, 2026

அதிரை : கூண்டோடு காலியான நாதக – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தம்பிகள்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதியின் நாம் தமிழர் கட்சியினர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியின் சீமான் பெரியார் குறித்த சர்ச்சையான கருத்துக்களை பொது வெளியில் பேசி வருவதால் தி.கவினர் உள்ளிட்ட பெரியாரிஸ்ட்டுகள் கொதிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர்
முன்னாள்மாவட்ட செயலாளர் தேவராஜ், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் தலைவர் சிவமானிக்கம், துவரங்குறிச்சி வீர தமிழர் முன்னனியின் ஜெயவேல் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் முன்னாள் துணை தலைவர் அதிரை சுஐபுதீன் உள்ளிட்ட நூற்று கணக்கானோர் நாதகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இதுகுறித்து பேசிய முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் சீமான் தலைமை பண்பிற்கு லாயக்கற்றவர் என்றும், மேதகு பிரபாகரனை கூட வரும் காலங்களில் தனது அரசியலுக்காக அவதூறுகளை அள்ளி வீச தயங்கமாட்டார் என்றும் நாதகவில் இருப்பவர்களுக்கு உரிய மரியாதை இல்லை என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து சுஐப் கூறுகையில், இஸ்லாம் குறித்தும் அவர்களின் நம்பிக்கை குறித்தும் நாதகவில் தெளிவான கொள்கை இல்லை என்றும், இதில் பயணிப்பவர்கள் நன்கு உணர்ந்திட வேண்டும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img