
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
+2 தேர்வில் அதிரையின் சராசரி தேர்ச்சியை கூட தொடாத மாணவர்கள்! 99.3% தேர்ச்சி பெற்று...
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி அதிரையில் உள்ள கல்வி நிறுவனங்களின்சராசரி தேர்ச்சி விகிதம் 95.5%மாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.3% ஆகும். ஆனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92% மட்டுமே. இது அதிரையின் சராசரி தேர்ச்சி விகிதமான95.5சதவீதத்தை விட 3.5% குறைவாகும். மேலும் மாணவர்களை விட 7.3% மாணவிகள் அதிகம் தேர்ச்சிபெற்று இந்தமுறையும் மாஸ் காட்டியுள்ளனர். அதேசமயம் அதிரையில் பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு70%க்கும் அதிகமான மாணவிகள் உயர் கல்வியை தொடர முடியாத சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
98% தேர்ச்சி!! 10ம் வகுப்பு தேர்வு முடிவிலும் ஸ்கோர் செய்த அதிரை அரசு பள்ளி!
அதிரை அரசினர் மகளிர் மேல்நிலையில் கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 123 மாணவிகள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 98% தேர்ச்சியை இந்த அரசு பள்ளி பெற்றுள்ளது. கொரொனா பேரிடர் காலத்திலும் மாணவிகளுக்கு தேவையான பயிற்சியை அரசு பள்ளி ஆசிரியர்கள்முறையாக அளித்ததாலேயே இந்த தேர்ச்சி சாத்தியமானதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். முன்னதாகபன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 99% தேர்ச்சியை இதே அரசு பள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது.
காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி: 10ம் வகுப்பில் 61% மாணவர்கள்தேர்ச்சி!
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சமீபத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்புபொதுத்தேர்வை 194 பேர் எழுதினர். இதில் 61% பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். கொரோனா ஊரடங்குக்கு பிறகுகுறுகிய கால அவகாசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வு என்பதால் தங்களால் உரிய பயிற்சிகளை மேற்கொள்ளமுடியவில்லை என தேர்ச்சி வாய்ப்பு தள்ளிபோயிருக்கும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எதுவாகினும்அடுத்தடுத்த தேர்வுகளை விரைவாக எழுதி தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை தங்களுக்குஇருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
Big breaking: +2 தேர்வில் 100% தேர்ச்சி! அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி...
அதிரையர்களுக்கு கல்வி அறிவை வழங்குவதில் MKN மதரஸா டிரஸ்ட் தவிர்க்க முடியாத பங்களிப்பை அளித்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தடிரஸ்ட்டின் கீழ் இயங்க கூடிய காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து 96 மாணவிகள் தேர்வுஎழுதியிருந்தனர். இதில் அத்தனை பேருமே தேர்ச்சி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். மாணவிகளை 100% தேர்ச்சிபெற செய்த தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்கள், பள்ளிபணியாளர்கள் ஆகியோருக்கு பெற்றோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 98% +2 மாணவர்கள் தேர்ச்சி!!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 63 மாணவ மாணவிகளில்98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளி அரசின் சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
99% மாணவிகளை தேர்ச்சிபெற செய்த அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி! தனியார் பள்ளி...
அதிரை மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 91 மாணவிகள்பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இதில் 99 சதவீத பேர் தேர்ச்சி பெற்று அனைவரையும்மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். தனியார் பள்ளிகள் மீதான மக்களின் மோகத்தை இந்த தேர்வு முடிவுகள் மூலம்அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி தவிடுபொடியாக்கியுள்ளது.








