
அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!
அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
அதிரையில் இறுதிக்கட்டத்தை எட்டிய ஆதார் சிறப்பு முகாம்! பயன்படுதிக்கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு!!
அதிரை மக்களின் தேவையற்ற பொருட்செலவு மற்றும் அலைச்சலை தவிர்க்க ஏதுவாக இம்தாத் இந்தியாமற்றும் தபால்துறை இணைந்து ஆதார் சிறப்பு முகாமை நடத்தி வருகின்றன. புதுமனைத்தெருவில் உள்ளஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறும் இந்த ஆதார் சிறப்பு முகாமில் 700க்கும் மேற்பட்டோர்பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த சிறப்பு முகாம் நிறைவு பெறஇருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. முன்பதிவுமற்றும் மேலதிக தகவல்களுக்கு +91 9944046001 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொள்ளவும்.
அதிரையர்களை அலறவிட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
கொரோனா காலத்தில் வீட்டிற்குள் அடைப்பட்டிருந்த தங்களது குழந்தைகளை அமைதிபடுத்த பெற்றோர்கையில் எடுத்த ஸ்மார்ட் ஃபோன் எனும் ஆயுதம் மாணவர்களின் செயல் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சனியனே! என்ன நிம்மதியா தூங்கவிடு!! இந்த போனை எடுத்துக்கிட்டு தொல என்று கொரோனா லாக் டவுனில் பெற்றோர் செய்த செயல் நாளடைவில் அந்த குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கமாகவே மாறிவிட்டது. எதை பார்க்கிறோம் எதற்கு பார்க்கிறோம் என்று கூட தெரியாமல் ரீல்ஸ்களை ஸ்கோர்ல் செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதெல்லாம் தான் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது. அதிரையை பொறுத்தவரை மாணவிகள் 97.5% தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் வெறும் 80% மட்டுமே தேர்ச்சிக்கான எல்லையை தாண்டி உள்ளனர். இதில் பலர் ஜெஸ்ட் பாஸ்.
தேர்வுகளோ, மதிப்பெண்களோ எந்த ஒரு மாணவனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்காது என்பதில் மாற்றுகருத்தில்லை. அதேசமயம் ஸ்மார்ட் ஃபோன் வலைக்குள் சிக்கி தேர்ச்சியை தள்ளிபோடும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் சிந்தித்தே ஆக வேண்டும்.
10ம் வகுப்பு தேர்வு முடிவு: காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி 94.5% தேர்ச்சி!!
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 129 மாணவிகள் எழுதினர். இதில் 94.5% மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவதுதேர்வு எழுதிய 129 பேரில் 122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக பன்னிரெண்டாம் வகுப்புபொதுத்தேர்வில் இந்த பள்ளி 100% தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
+2 தேர்வில் அதிரையின் சராசரி தேர்ச்சியை கூட தொடாத மாணவர்கள்! 99.3% தேர்ச்சி பெற்று...
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி அதிரையில் உள்ள கல்வி நிறுவனங்களின்சராசரி தேர்ச்சி விகிதம் 95.5%மாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.3% ஆகும். ஆனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92% மட்டுமே. இது அதிரையின் சராசரி தேர்ச்சி விகிதமான95.5சதவீதத்தை விட 3.5% குறைவாகும். மேலும் மாணவர்களை விட 7.3% மாணவிகள் அதிகம் தேர்ச்சிபெற்று இந்தமுறையும் மாஸ் காட்டியுள்ளனர். அதேசமயம் அதிரையில் பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு70%க்கும் அதிகமான மாணவிகள் உயர் கல்வியை தொடர முடியாத சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
98% தேர்ச்சி!! 10ம் வகுப்பு தேர்வு முடிவிலும் ஸ்கோர் செய்த அதிரை அரசு பள்ளி!
அதிரை அரசினர் மகளிர் மேல்நிலையில் கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 123 மாணவிகள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 98% தேர்ச்சியை இந்த அரசு பள்ளி பெற்றுள்ளது. கொரொனா பேரிடர் காலத்திலும் மாணவிகளுக்கு தேவையான பயிற்சியை அரசு பள்ளி ஆசிரியர்கள்முறையாக அளித்ததாலேயே இந்த தேர்ச்சி சாத்தியமானதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். முன்னதாகபன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 99% தேர்ச்சியை இதே அரசு பள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது.
காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி: 10ம் வகுப்பில் 61% மாணவர்கள்தேர்ச்சி!
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சமீபத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்புபொதுத்தேர்வை 194 பேர் எழுதினர். இதில் 61% பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். கொரோனா ஊரடங்குக்கு பிறகுகுறுகிய கால அவகாசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வு என்பதால் தங்களால் உரிய பயிற்சிகளை மேற்கொள்ளமுடியவில்லை என தேர்ச்சி வாய்ப்பு தள்ளிபோயிருக்கும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எதுவாகினும்அடுத்தடுத்த தேர்வுகளை விரைவாக எழுதி தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை தங்களுக்குஇருப்பதாகவும் அவர்கள் கூறினர்.









