Monday, December 1, 2025

எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் கிடையாது ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !! இனியாவது கைது செய்வார்களா ?

spot_imgspot_imgspot_imgspot_img

பெண் பத்திரிக்கையாளர் குறித்து எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் தரக்குறைவான கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் எஸ்வி சேகர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். எஸ்வி சேகரின் இழிவான கருத்தை கண்டித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

எஸ்வி சேரை கைது செய்ய தமிழக அரசும் தயக்கம் காட்டி வந்தது. எஸ்வி சேகர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் என்பதாலும் தமிழக பாஜக நிர்வாகிகளில் ஒருவர் என்பதாலும் இந்த தயவு காட்டப்பட்டதாக புகார் எழுந்தது.

ஆனாலும் போலீசாருக்கு போக்கு காட்டி கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகிறார் எஸ்விசேகர். இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்வி சேகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. எஸ்வி சேகரை கைது செய்ய தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் எஸ்வி சேகர் விசாரணை நீதிமன்றமான சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் எஸ்வி சேகரை கைது செய்ய இன்று வரை விதித்திருந்த தடையையும் நீக்கிக்கொண்டது உச்சநீதிமன்றம்.

எஸ்வி சேகரின் முன்ஜாமீன் வழக்கில் உச்சநீதிமன்றம் கைவிரித்ததால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img