Monday, December 1, 2025

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது – தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி !

spot_imgspot_imgspot_imgspot_img

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க , பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, நீண்ட நாள்களாகப் போராட்டம் நடைபெற்றுவந்தது. கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தினால் , போலீஸார் துப்பாகிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பின்னர், ‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்’ எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஆலையும் மூடப்பட்டது. இந்நிலையில் , ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும் தமிழக அரசு அறிவித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த 3-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பசுமைத் தீர்ப்பாயம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையில், தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் , இதுகுறித்து வரும் 18-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு , அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் முழு விசாரணை நிறைவடைந்து , இறுதித் தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img