Sunday, April 28, 2024

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது – தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி !

Share post:

Date:

- Advertisement -

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க , பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, நீண்ட நாள்களாகப் போராட்டம் நடைபெற்றுவந்தது. கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தினால் , போலீஸார் துப்பாகிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பின்னர், ‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்’ எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஆலையும் மூடப்பட்டது. இந்நிலையில் , ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும் தமிழக அரசு அறிவித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த 3-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பசுமைத் தீர்ப்பாயம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையில், தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் , இதுகுறித்து வரும் 18-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு , அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் முழு விசாரணை நிறைவடைந்து , இறுதித் தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...