Saturday, March 21, 2026

மழைநீரோடு கழிவுநீரும் தேங்கி நிற்கும் அவலம்..நடவடிக்கைக்கோரி மனுவளித்த தீனுல் இஸ்லாம் இளைஞர் மன்றத்தினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் அதிரை கடற்கரைத் தெரு பகுதியில் மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. அதிரை பேரூராட்சியின் சார்பில் முறையான வடிகால் வசதி செய்யப்படாததே இம்மழைநீர் தேங்கி நிற்பதற்கு காரணம்.

கடற்கரைத்தெருவில் மழைநீரோடு கழிவுநீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அதிரை பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அப்போது, கடற்கரைத்தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீரோடு கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. பலமுறை அதிகாரிகளை அணுகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வரும் 7ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்டு இருக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் முறையான வடிகால் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img