Tuesday, December 2, 2025

கஜாவின் கோரத்தாண்டவம்… 19 நாட்களுக்கு பின் மின்சாரத்தைக் கண்ட மல்லிப்பட்டினம் !

spot_imgspot_imgspot_imgspot_img

ஒட்டு மொத்த டெல்டா மக்களும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அடுத்த வேளை தன்னுடைய பிள்ளைகளுக்கு உணவு இருக்காது என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். விடிந்தால் வீடு இருக்காது. கண் விழித்தால் மரம் இருக்காது என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. நினைத்துப் பார்க்க முடியாதொன்றை நிகழ்த்துவதுதானே இயற்கையின் நியதி ?

ஆம் கஜா என்னும் புயல் கோரதாண்டவம் ஆடி ஒட்டு மொத்த டெல்டாவையும் புரட்டிபோட்டுவிட்டது. ஆளுயர வளர்ந்து நின்ற அத்துனை மரங்களும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வீழ்ந்து கிடக்கின்றன. கஜாவால் பெரும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தஞ்சை மாவட்ட கடலோர ஊர்களும் அடக்கம். அதிலும் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகள் வரலாறு காணாத அழிவை சந்தித்தன.

கஜாவால் மல்லிப்பட்டினத்தில் கடந்த மாதம் 15ம் தேதி சென்ற மின்சாரம் இன்று 4ம் தேதி தான் வந்துள்ளது. அதுவும் சில பகுதிகளுக்கு மட்டும். இன்னும் சில பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படவில்லை. அந்த குறிப்பிட்ட சில பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த பகுதிகளுக்கும் இன்னும் ஓரிரு தினங்களில் மின் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய தேவையான மின்சாரம் இன்றி மல்லிப்பட்டினம் மக்கள் 19 நாட்கள் வாழ்ந்துள்ளனர்.

காலங்கள் மாறினாலும் கஜா புயல் ஏற்படுத்திய வடு மக்கள் மனதில் என்றும் அழியாது !

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img