Sunday, February 1, 2026

முட்டாள் அதிரையர்கள்?

spot_imgspot_imgspot_imgspot_img

தலைப்பை படித்ததும் இதனை எழுதியவனை சமூக வலைதளங்களில் வசைபாடி கொண்டிருப்பார்கள் , பதிவை முழுமையாக படிக்காத மேல்புள் மேயும் மேதாவிகள். ஆனால் இந்த பதிவின் நோக்கம் அதிரையர்களை இழிவுபடுத்துவது அல்ல. மாறாக அதிரையர்களை பற்றி பிற ஊர்காரர்கள் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை சற்று விரிவாக விவரிக்கவே விரும்புகிறேன்.

 

அன்று வழக்கம்போல் சென்னை மன்னடியில் உள்ள 2வது (நடு) இந்தியன் டீ கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். என்னருகே நின்றிருந்த நமக்கு நன்கு பரீட்சையமான ஊரை சேர்ந்த ஒருவர் என்னிடம் நீங்க எந்த ஊர்? என வினா தொடுத்தார்.

 

 

நான் அதிரை என்று சொன்னதும், அவர் தன்னை ஒரு டிராவல்ஸ் உரிமையாளர் என அறிமுகம்படுத்திக் கொண்டார். பின்னர் எங்களின் பேச்சு நீண்டது, அப்போது அவர் அதிரையர்களின் அறியாமை குறித்து கவலையுடன் பேசினார்.

 

உலகில் பல நாடுகளில் தங்கி இருக்கும் அதிரையர்கள் தங்களின் உழைப்பால் உயர்ந்தவர்கள் என புகழாரம் சூட்டிய அந்த வெளியூர்காரர், சில சமயங்களில் பணத்தின் மீது கொண்ட மோகத்தால் முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதாக வேதனை தெரிவித்தார்.

 

குறிப்பாக தான் உழைக்க செல்லும் நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல், தற்சமயம் கிடைக்கும் வருவாயை மட்டும் மனதில் கொண்டு அதிரையர்கள் எடுக்கும் முடிவு ஆபத்தானது என்று எச்சரிக்கை செய்தார். இதுகுறித்து சந்தர்பவாதிகளும் அவர்களிடம் எடுத்து கூறுவது இல்லையாம். மேலும் அதிரையர்கள் பலர் இன்றும் அறியாமையில் சிக்கிதவிப்பதாக ஒரு சம்பவத்தின் மூலம் சுட்டிக் காட்டி தனது பேச்சை நிறுத்தினார் அந்த டிராவல்ஸ் உரிமையாளர்.

 

கடல் கடந்து வணிகம் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட சமூகம் இன்று பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அறியாமையில் சிக்கியிருப்பது உண்மையில் வேதனைக்குரியது…

 

நாடு கடந்து செல்வதற்கு முன் அந்த நாட்டின் பொருளாதார நிலையை பற்றி அறிந்திருக்க வேண்டியது அதிரையர்களின் கடமை மட்டுமல்ல நமது உரிமை…

 

பேர்வழிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நமது வாழ்வை அடகு வைத்துவிட வேண்டாம்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img