Monday, December 1, 2025

அதிரை வழியாக ஈசிஆ-ரில் சென்னை சென்ற ஆம்னி பேருந்து விபத்து – ஒருவர் பலி !

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக ஈசிஆ-ரில் சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்றும் அந்த தனியார் ஆம்னி பேருந்து, வழக்கம்போல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை வழியாக பயணிகளுடன் சென்னை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கல்பாக்கத்திற்கு முன்பு மெய்யூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து விபத்தில் சிக்கியது.

இடையில் வந்த இருசக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில், ஆம்னி பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்து ஓட்டுநர் சுரேஷ் மற்றும் லாரி டிரைவர் படுகாயமடைந்தனர். ஆம்னி பேருந்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை வழியாக சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்து இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img