நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2017ஆண்டிற்கான சம்பள நிலுவை தொகை பாக்கியை மத்திய அரசு வழங்கவில்லை.
இதனிடையே பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
ஆனால் எதற்கும் செவி சாய்க்காத அரசு மொத்தன போக்காக நடந்துகொள்கிறது என தொழிற் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.
இந்நிலையில் இன்றும், நாளையும் வங்கி அடைக்கப்படும் எனவும்,அதேபோல் பிப்ரவரி 11,12,13ஆகிய தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளன.
இதனால் வங்கி பரிமாற்றங்கள், இதர சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக நுகர்வோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.