Saturday, September 13, 2025

அதிரை திமுகவினர் மறைந்த பொதுச் செயலாளருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி !

spot_imgspot_imgspot_imgspot_img

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில பொது செயலாளராக இருந்தவர் க.அன்பழகன்.

இனமான பேராசிரியர் என திமுகவினரால் அழைக்கப்பட்ட பேராசிரியர் க. அன்பழகன், 43 ஆண்டு காலமாக திமுக பொது செயலாளராக இருந்தர். பல்வேறு தொகுதிகளில் இருந்து 9 முறை சட்டமன்றத்திற்கு தேர்வாகியும், முன்னாள் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர்.

வயோதிகத்தால் உடல்நலக் குறைப்பாடு ஏற்பட்டு கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காலமானார். இதனை தொடர்ந்து, அதிராம்பட்டினம் திமுகவின் நகர செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் சென்னைக்கு விரைந்தனர்.

அங்கு மரணித்த அன்பழகனார் உடல் வைக்கப்பட்ட அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதில் அதிரை திமுக செயலாளர் இராம. குணசேகரன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றிய சிறுபான்மையினர் அணி செயலாளர் மரைக்கா.கே. இதிரீஸ் அகமது உள்ளிட்டவர்களும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img