Saturday, September 13, 2025

பட்டுக்கோட்டையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா சூப் இலவசமாக வழங்கி வருகின்றனர்…

spot_imgspot_imgspot_imgspot_img

இப்பொழுது உலக நாடுகள் முழுவதும் பேசப்பட்டு வருவது கொரோனா வைரஸ் பற்றித்தான்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நீதிமன்றம் அருகில் உள்ள தனியார் ஜூஸ் விற்பனை நிலையத்தில் இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் பொது மக்களுக்கு வராமல் இருப்பதற்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்திற்காக தக்காளி, மிளகு ,வெங்காயம், மல்லித்தழை வேப்பிலை ,மஞ்சள் தூள், மற்றும் பல்வேறு மூலிகைகளை மூலம் செய்யப்பட்ட சூப்பை பொதுமக்களுக்கு இன்று முதல் இலவசமாக வழங்கிவருகிறார்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் கடைக்கு சென்று மூலிகை சூப்பை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதுகுறித்து இளைஞர் சிவா கூறும்போது கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் வருகிறது என்று மருத்துவர்கள் கூறும் நிலையில்.

மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்னுடைய சின்ன பங்களிப்பாக எதிர்ப்பு சக்திக்காக பொதுமக்களுக்கு என்னால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக மூலிகை சூப்பை இலவசமாக வழங்கி வருகிறேன் என்று கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img