Wednesday, December 3, 2025

அதிரை : உடைந்த குடிநீர் குழாயை விரைவாக சரிசெய்த பேரூராட்சி – நன்றி தெரிவித்த கடற்கரைத்தெரு ஜமாத்தினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பெரிய ஜுமுஆ பள்ளி அருகே தனியார் நிறுவனம் சார்பில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டபட்டபோது, பேரூராட்சியின் ராட்சத குடிநீர் குழாய் உடைப்புக்குள்ளானது.

இதனால் நேற்று கடற்கரைத்தெரு, ஹாஜா நகர், புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒருநாள் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

ராட்சத குழாய் உடைந்த நிலையில், அதனை உடனடியாக சரிசெய்யும் பணியில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் களத்தில் இறங்கியது.

பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி நேற்று இரவுக்குள் உடைந்த குழாயை சரி செய்தனர். இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோரின் சோதனைகளுக்கு பிறகு மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

கோடை காலத்தில் மக்களின் தேவை கருதி, விரைவாக சரிசெய்த பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்களுக்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகத்தினர் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img