Saturday, September 13, 2025

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் !

spot_imgspot_imgspot_imgspot_img

வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலைமையில் தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது.

மயிலாப்பூரில் அதிகபட்சம் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த நிலையில்தான் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்று ஒரு எச்சரிக்கையை பிறப்பித்தது. இதற்கு இடையே இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு, மஞ்சள் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த எச்சரிக்கை தொடரும். அதன் பிறகு சற்று மழை குறைந்த போதிலும் நவம்பர் 3ம் தேதிக்கு பிறகு, மீண்டும் தமிழகத்தில் கன மழை தொடங்கும், என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற வடக்கு தமிழகம், அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் தொடரும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

2015 ஆம் ஆண்டு சென்னையில் பெரிய பள்ளம் புரட்டிப்போட்டது. ஒரே நாளில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மிகப்பெரிய மழை பெய்தது. இப்போது ஒரே நாளில் 20 செமீ மழை பெய்துள்ளது. மெரினாவில் 2017க்கு பிறகு முதல் முறையாக வெள்ளம் தேங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், பாலவாக்கம் 14 சென்டிமீட்டர், பாடி 12 சென்டிமீட்டர், ஜார்ஜ் டவுன் 11 செ.மீ மற்றும் கொரட்டூர் மற்றும் அண்ணாநகர் தலா 10 சென்டிமீட்டர், நுங்கம்பாக்கம் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 2017 நவம்பர் பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் இவ்வளவு அதிக மழை பெய்தது இதுதான் முதல் முறையாகும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...
spot_imgspot_imgspot_imgspot_img