Sunday, February 1, 2026

பள்ளிகள் திறப்பதில் ஏன் இந்த அவசரம்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி!

spot_imgspot_imgspot_imgspot_img

பள்ளிகள் திறக்கப்படுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பரவும் கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரை இன்றி மூடப்பட்டுள்ளது..  இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.  இது மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாகப் பெற்றோரும் ஆசிரியர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

கரோனா தொற்றின் வேகம் சற்று குறைந்துள்ளதால், பள்ளிகள் மற்றும் திரையரங்குகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அக்டோபர் 30-ம் தேதி அறிவித்தது. இதனை அடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன், நவம்பர் 30-ம் தேதி வரை பொது முடக்கம் நீடிக்கும். 9,10,11 மற்றும் 12 ஆகிய மாணவர்களுக்கு நவம்பர் 16 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பில் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்புக்குப் திமுக தலைவர் ஸ்டாலின் “பள்ளிகள் திறப்பில் அவசர கோலமான அறிவிப்பு ஏன்?  என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரொனா குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா ?

பெற்றோர் – ஆசிரியர்- மருத்துவர்களுடன் ஆலோசனைகளை பெற்று ஜனவரி 2021-ல் அப்போதைய சூழலை ஆய்ந்துதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும்.” என்றுதமது ட்வீட் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....
spot_imgspot_imgspot_imgspot_img