Friday, December 19, 2025

மதுக்கூரில் ததஜ-வின் மாவட்ட மாநாடு மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மதுக்கூரில் யார் இவர் ? என்ற தலைப்பில் மாபெரும் மாவட்ட மாநாடு மற்றும் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் மூன்றாவதாக தஞ்சை மாநகர பகுதிக்கான அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

மதுக்கூர் பூண்டியார் திடலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் தஞ்சை வடக்கு, திருவாரூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் அர்ஷின் நிழல் என்ற தலைப்பில் சிறுமி முபினா அப்துல் வாஹித், ஸஹாபியப் பெண்களும் இன்றைய பெண்களும் என்ற தலைப்பில் சகோதரி. மர்லியா ஆலிமா அவர்களும், இலக்கை மறந்த இளைஞனே என்ற தலைப்பில் அன்ஸர் MISC அவர்களும், நபிவழியே நம்வழி என்ற தலைப்பில் ஹமீது ரஹ்மான் அவர்களும், நபிகளார் உருவாக்கிய மனிதநேயம் என்ற தலைப்பில் மாநில செயலாளர் E. முஹம்மது அவர்களும், உலகம் வியக்கும் ஆட்சியாளர் என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் சிறப்புரையாற்றினர்.

பின்னர் தஞ்சை மாநகர பகுதிக்கான புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. முக்கிய தீர்மானங்களை மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் வாசித்தார். மாவட்ட துணை செயலாளர் வல்லம் ஜாபர் நன்றியுரை கூறினார். இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மதுக்கூர் கிளை நிர்வாகிகள், ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img