Saturday, December 20, 2025

பரவும் கொரோனா: பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகை அச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் சற்று ஓய்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நோயின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இதனால் கேராளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் முக்கிய பண்டிகையான ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிகளை வீடுகளிலேயே நடத்தி கொள்ள உத்தரவு பிறப்பித்து கோவில்களில் நடக்கவிருந்த சிறப்பு பிரார்த்தனைகளுக்கு தடையும் விதித்து இருக்கிறது.

தமிழக எல்லைக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் கொடிய கொரோனா பல்வேறு மாவட்டங்களில் தமது கை வரிசையை காட்ட தொடங்கியுள்ளது.

எனவே அதிரை நகர பொதுமக்கள் தேவையற்ற முறையில் வெளியில் சுற்றுவதை நிறுத்தி கொள்வதோடு முககவசம் சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img