தமிழகத்தில் கிராம, ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக தங்கள் பகுதியின் குறைகளை யாரிடம் முறையிடுவது என தெரியாமல் மக்கள் திக்குமுக்காடி கடும் கடுப்பிலும் வெறுப்பிலும் உள்ளனர். இதனிடையே, இந்த மாத இறுதிக்குள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிரை நகராட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. கஜா புயல் நிவாரணம், மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருவதால் மக்கள் நிச்சயம் தங்களை ஆதரித்து வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...
பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு!
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...





