Saturday, September 13, 2025

வெள்ளத்தில் மிதக்கும் பிலால்நகர் – அதிகாரிகளை கண்டித்து ஈசிஆரில் மறியல்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதிரையின் பெரும்பாலான குளங்கள் கனமழையால் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.

இந்நிலையில் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில், நகர் முழுவதும் மழைநீர் புகுந்து மிதக்கின்றது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

பருவமழை காலத்தில் வடிகால்களை தூர்வாராததே பிலால் நகரின் அவலநிலைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து காலதாமதம் செய்யும் ஆர்டிஓ, வட்டாட்சியர் ஆகியோரை கண்டித்து தற்போது பிலால் நகர் பெட்ரோல் பங்க் அருகில் ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டம் நடக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என...

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும்...
spot_imgspot_imgspot_imgspot_img