கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றுவிட்டு ஊர் திரும்பிய அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லமை வரவேற்று அப்போது அவரது அணியில் இருந்த அப்துல் ஜப்பார் துல்கர்ணை என்பவர் அடித்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விளக்கம் அளித்துள்ள அப்துல் ஜப்பார் துல்கர்ணை, ஏலெட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநில திமுக-காரரால் பாதிக்கப்பட்டபோது எஸ்.எச்.அஸ்லமின் தலைமையை ஏற்று செயல்படலாம் என நினைத்து சம்மந்தப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரின் போக்கு பிடிக்காததால் விலகிவிட்டதாக கூறும் அப்துல் ஜப்பார், தன் குடும்பமே திமுக குடும்பம் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். மனிதன் தவறிழைப்பது இயற்கையே என்றும் அன்றைய தினமே முடிவெடுத்து தனியே செயல்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





