உக்ரைன் நாட்டில் சிக்கிய அதிரை மாணவர்கள் 3 பேரின் தகவல்களை திரட்டி அரசின் கவனத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் கொண்டு சென்றது. மேலும் அவர்களின் குடும்பத்தினரும் மாணவர்களை மீட்டு கொண்டு வர இரவு பகல்பாராமல் முயற்சித்தனர். மேலும் அதிரை நகர காங்கிரஸ் தலைவர் தமீம் அன்சாரி இந்த விஷயத்தில் சிறப்பு கவனமெடுத்து அதிரை மாணவர்கள் குறித்த தகவல்களை காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நாகூர் கனி, மாநில சிறுபான்மை பிரிவு அஸ்லம் பாட்ஷா ஆகியோர் மூலம் சென்னைக்கு வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்நிலையில் அதிரை மாணவர்கள் 3 பேரும் உக்ரைனில் இருந்து வெளியேறி போலந்து, ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் விரைவில் விமானங்கள் மூலம் தாயகம் திரும்ப இருக்கிறார்கள்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





