உக்ரைன் நாட்டில் சிக்கிய அதிரை மாணவர்கள் 3 பேரின் தகவல்களை திரட்டி அரசின் கவனத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் கொண்டு சென்றது. மேலும் அவர்களின் குடும்பத்தினரும் மாணவர்களை மீட்டு கொண்டு வர இரவு பகல்பாராமல் முயற்சித்தனர். மேலும் அதிரை நகர காங்கிரஸ் தலைவர் தமீம் அன்சாரி இந்த விஷயத்தில் சிறப்பு கவனமெடுத்து அதிரை மாணவர்கள் குறித்த தகவல்களை காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நாகூர் கனி, மாநில சிறுபான்மை பிரிவு அஸ்லம் பாட்ஷா ஆகியோர் மூலம் சென்னைக்கு வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்நிலையில் அதிரை மாணவர்கள் 3 பேரும் உக்ரைனில் இருந்து வெளியேறி போலந்து, ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் விரைவில் விமானங்கள் மூலம் தாயகம் திரும்ப இருக்கிறார்கள்.
More like this
அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...